திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் எம்ஜிஆர் நகர் காந்தி தெருவில் வசித்து வருபவர்கள் புருஷோத்தமன் ரமணி தம்பதியினர். இவர்களுக்கு யுவராஜ் வயது (9) என்ற ஒரு மகன் உள்ளார். இதே போன்று புருஷோத்தமன் வீட்டின் மாடியில் இவரது சகோதரரான ஹரிராம் ரேவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மகேஷ் (10) தனஞ்செழியன் (9) என்ற இரண்டு 2 மகன்கள் உள்ளனர். மேலும் மகேஷ், தனஞ்செழியன், யுவராஜ், ஆகிய மூன்று சிறுவர்களும் ஆரணியில் உள்ள தனியார் பள்ளிகளில் 4 ஆம் வகுப்பு மற்றும் 5ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர்.


இந்நிலையில் இன்று மூன்று சிறுவர்களும் அவர்களது வீட்டின் வெளியே வழக்கம்போல் விளையாடிக்கொண்டு இருந்தபோது பரிமளா  பெருமாள் என்பவரின் கடையில் தரமற்ற மிட்டாய்கள் வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.


 




 


கடையில்  மிட்டாய் வாங்கி  சாப்பிட்டவுடன் வீட்டுக்கு வந்த மூன்று சிறுவர்களுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டு வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்து உள்ளனர்.  இதனைக்கண்ட பெற்றோர் பதற்றம் அடைந்து உடனடியாக மூன்று சிறுவர்களையும்  ஆரணி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன் பின்னர்  மூன்று சிறுவர்களையும்  பரிசோதித்த, மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்  மூலம் வேலூர்  அடுக்கம்பாறை அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தற்போது  சிறுவர்கள்   தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு அங்கு அவர்கள் மூன்று சிறுவர்களுக்கும்  சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது .



 


இதையடுத்து பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஆரணி கிராமிய காவல் நிலைய காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று தரமற்ற மிட்டாய்களா என்றும் அதில் தயாரிக்கப்பட்ட நாள் மற்றும் காலாவதியான பொருட்களா என பார்த்துள்ளனர் அதன் பிறகு கடைக்காரர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரணி அருகே மலிவு விலையில் சிறுவர்கள் கவரும் வடிவமைப்பில் தரமற்ற பொருட்களை வாங்கி சாப்பிட்ட சிறுவர்கள் உடலில்  உபாதை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 


Paralympics 2020: தங்க மங்கைஅவானிக்கு பிரத்யேக எஸ்.யூ.வி கார் பரிசு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு!