சேலம் மாவட்டம் தொளசம்பட்டி நச்சுவாயனூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிசாமி - லதா தம்பதியின் 14 வயது மகன் சபரி காணாமல் போனதாக கடந்த 23-ஆம் தேதி தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். இதனிடையே லதா பணியாற்றிய வந்த ஜவுளி கடை உரிமையாளர் சரவணன் செல்போனுக்கு நேற்று (27.08.2021) வந்த அழைப்பில் பேசிய மர்ம நபர் பழனிசாமி - லதா தம்பதியின் மகனை கடத்தி வைத்துள்ளதாக கூறி ரூபாய் 50 லட்சம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.
செல்போன் அழைப்புகள் இன் அடிப்படையில் தனிப் படையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சிறுவனை கடத்திய நபர் சேலம் சீலநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த செல்வ குமார் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து செல்வகுமாரை அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், சிறுவன் கடத்தல் தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு செல்வகுமார் அந்த நபரை கைது செய்ததாகவும், முதல் தொடர்ச்சியாக செல்வகுமாரின் பட்டறையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவன் சபரியை மீட்டதாகவும் தெரிவித்தார்.
இதற்காக செல்போன்களை திருடி மாற்று எண்ணிலிருந்து வீடியோவை அனுப்பியதாக காவல்துறையினரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தெரிவித்தார். சிறுவன் கடத்தப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த தகவல் கிடைத்தவுடன் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினருக்கு அவர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும் செல்வகுமார் இதற்கு முன் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.