திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் ஒரவந்தவாடி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் பகுதியை சேர்ந்து பழனி வயது (40). இவருடைய மனைவி வள்ளி வயது (37) . இந்த தம்பதிக்கு 5 பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இதில் மூத்த மகளுக்கு மட்டும் திருமணமான ஆகிவிட்டது. இந்நிலையில் 5 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இதில் குடி போதைக்கு அடிமையான பழனி தன்னுடைய மனைவி வள்ளியின் நடத்தை  மீது சந்தேகம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்தது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி தனது இருசக்கர வாகனத்தை அடமானம் வைத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.


 




அதனைத்தொடர்ந்து வள்ளி தன்னுடைய உறவினர்களிடம் தனது கணவர் குடித்துவிட்டு தன்னை அடிப்பதாக கூறியுள்ளார். அதன் பிறகு   பழனி மற்றும் வள்ளியின் உறவினர்கள் நேரில் வந்து இருவரையும் சமாதானம் செய்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்து வெளியே சென்ற பழனி குடித்து விட்டு நள்ளிரவில் வீட்டிற்கு வந்து மீண்டும் மனைவி வள்ளியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பழனி வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வள்ளியின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து தூக்கத்தில் இருந்த மகள்கள் திரிஷா வயது 15, மோனிஷா வயது 14, பூமிகா வயது 9, சிவசக்தி வயது 6, மகன் தனுஷ் வயது 4 ஆகிய ஆறு நபர்களையும் கொடூரமாக கத்தியால் துடிக்க துடிக்க அறுத்து கொலை செய்து விட்டு  பக்கத்து அறையான பூஜை அறையில் பழனியும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


 




அதிகாலையில்  பக்கத்து வீட்டில்  இருந்தவர்கள் மாடு பால் கறப்பதற்காக வள்ளியின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அப்போது கதவு உள்பக்கமாக தாலிட்டிருந்ததால் ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டுக்காரர்  பார்த்துள்ளார். குடும்பமே ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர்  கிராம மக்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது குடும்பமே ரத்த வெள்ளத்தில் வெட்டுபட்ட நிலையில் இருந்ததை கண்டு கிராம மக்கள் அழுதுள்ளானர். அப்போது பூமிகா என்ற 9 வயது சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


 




அந்த குழந்தையின் பின்பக்கம் மண்டையில் வெட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து 6 பேரின் பிரேத பரிசோதன திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டு,அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.  பின்பு உடல்களை கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டின் அருகே வரிசையாக அஞ்சலிக்காக வைக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடலுக்கு எம்.எல்.ஏ.க்கள் சரவணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து இடுகாட்டில் 6 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.