தஞ்சையில் பக்கத்து வீட்டு பாத்ரூமில் வெப்கேமராவைப்பொருத்தி அங்குள்ள பெண்கள் குளிப்பதைப்பார்த்து வந்த ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் மகனைப் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.


 சமூகத்தில் பெண்களைக் காமப்பொருளாகப்பார்க்கும் பழக்கம் தொடரத்தான் செய்கிறது. அதிலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பல்வேறு நூதன முறைகளில் பெண்களின் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அப்படித்தான்  தஞ்சாவூரைச்சேர்ந்த ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் மகன் வெப் கேமராவினைப்பயன்படுத்தி பெண்கள் குளிப்பதைப்பார்த்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.


தஞ்சாவூர் தெற்கு தெருவினைச்சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அரசு உதவிப்பெறும் பள்ளயில் உதவியாளராக பணியாற்றிவருகிறார். இவர் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் ஒய்வு பெற்ற காவல் ஆய்வாளரின் நஷீர் அகமது என்பது அவரது மனைவி மற்றும் 6 வயது மகளுடன் வசித்து வருகிறார். ஒருநாள் நசீர் அகமது அவரது வீட்டு மாடியிலிருந்து வெங்கடேசன் மனைவி மற்றும் மகள் குளிப்பதைப்பார்த்திருக்கிறார். இதனையடுத்து இருவரின் வீட்டிலும் இதனால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருந்தப்போதும் நசீர் அகமதுவின் ஆசை குறையவில்லை. எப்படியாவது வெங்கடேசன் மனைவி மற்றும் மகள் குளிப்பதைப்பார்த்தே ஆக வேண்டும் என்பதால் அதற்காக வெப் கேமிராவினைப்பயன்படுத்தியும், இதில் சார்ஜ் குறையாமல் இருப்பதற்கு பவர் பேங்க் உடன் அதனைப் பொருத்தி வைத்திருக்கிறார்.





இந்நிலையில் தான் ஒரு நாள் வெங்கடேசனின் மனைவி பாத்ரூமில் குளிக்கச்சென்ற போது ஏதோ மின்னுவது போல தெரிந்துள்ளது. இதுக்குறித்து தனது கணவரிடம் வந்து தெரிவிக்கும் போது அனைவருக்கும் இத்தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்ததன் பேரில், விசாரணை நடத்தி ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரின் மகன் நசீர் அகமதுவினை கைது செய்தனர்.


இதுக்குறித்து வெங்கடேசன் தெரிவிக்கையில், எனது வீட்டின் அருகில் வசித்து வருபவர் தான் நசீர் அகமது. இவரது மனைவி அரசு ஊழியராகப் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மாடியிலிருந்து எனது மனைவி மற்றும் மகள் குளிப்பதை பார்த்தப்பொழுது பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து அவர் எனது வீட்டிற்கு அருகில் இன்னொருவருக்கு சொந்தமான காலி இடம் ஒன்று உள்ளது. இதன் உரிமையாளர் வெளியூரில் இருப்பதால், வீட்டைப்பார்ப்பதற்கு யாராவது வந்தால், வீட்டைச்சுற்றிக் காட்டுவதற்காக வீட்டின் சாவியை நசீர் அகமதுவிடம்  கொடுத்து வைத்திருந்தார்.





இதனைத் தனக்கு சாதகமாகப்பயன்படுத்திய நசீர், காலியாக உள்ள வீட்டின் குளியலறையின் கண்ணாடியைக் கழற்றி, ஒரு அடி இடைவெளியில் உள்ள எங்கள் வீட்டின் குளியலறையின் மேல வெப்கேமராவைப் பொருத்தி மகள் மற்றும் மனைவி குளிப்பதைப்பார்த்து வந்துள்ளார். இதுக்குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் அவரை கைது செய்ததாக வெங்கடேசன் தெரிவித்தார்.