நெல்லை கொக்கிரகுளத்தை அடுத்த கீழ வீரவராகபுரத்தை சேர்ந்தவர் முகேஷ், இவருக்கு சுபிதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிகொண்டு இருந்த போது குருந்துடையார்புரம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள சுடலை மாடசாமி கோவில் அருகே மறைந்திருந்த மர்ம கும்பல் முகேஷை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இவரது அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடம் வந்த அக்கம் பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் தலைமையிலான போலீஸார் முகேஷ் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு  ஆய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.


இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முருகேஷ் (24) என்பவர் சேரன்மகாதேதி நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அழகுமுத்து(24), மகாராஜன்(20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 17 வயது சிறுவன் கூர் நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.


இந்த நிலையில் முகேஷை கொலை செய்ததற்கான காரணம் குறித்து கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்தாக காவல்துறையினர்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கொலை செய்யப்பட்ட முகேஷ் ஊர் நாட்டாமையாக இருந்து வந்துள்ளார். அப்போது ஊரில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்துள்ளார், அது தொடர்பாக முகேஷுக்கும், அழகுமுத்து தரப்பினருக்கும் கோவில் கொடை விழா நேரத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அழகுமுத்துவின் உறவினரை வழக்கு ஒன்றில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் முகேஷ் கொடுத்த தகவலின் பேரில் தான் உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என எண்ணிய அழகுமுத்து நண்பர்களுடன் சேர்ந்து முகேஷை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். அதன்படி நண்பர்களுடன் சேர்ந்து அவரை வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.  முன்விரோதம் காரணமாக இளைஞர்  வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 



 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண