தாம்பரம் அடுத்த புலிக்கொரடு பகுதியை சேர்ந்தவர் விஜய் ரசிகர் கருப்பசாமி (27). லாரி ஓட்டுனரான இவர், தாம்பரம் பகுதியில் அவர் வேலை செய்து வரும்  லாரி ஷெட் அருகிலுள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாம்பரம் காவல்துறையினர் உயிரிழந்த கருப்பசாமியின் உடலை மீட்டு சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.






இதனை அடுத்து தாம்பரம் போலீசார் உயிரிழந்த கருப்பசாமி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணையும் மேற்கொள்ள தொடங்கினர். காவல்துறையினர் தற்கொலை குறித்து நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட விஜய் ரசிகர்,  தளபதி மக்கள் இயக்கத்தில், தாம்பரம் 32 வார்டு நிர்வாகியாக பதவியில் இருந்தார்.


இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரின் தாய் சின்னமா, கருப்பு சாமியை மது குடிக்க வேண்டாம் என கண்டித்துள்ளார். இதனால் மது போதையில் இருந்த கருப்பசாமி சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அதன் பின்பு அதே பகுதியில் உள்ள விநாயகா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சரவணன் என்பவரிடம் லாரி ஓட்டுனராக வேலை பார்த்துக் கொண்டு அங்கு உள்ள இடத்திலே தங்கி வந்துள்ளார். இதற்கிடையில், அதிக மது போதையில் கருப்புசாமி அவர் தாய் சின்னமாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு செல்போனை துண்டித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னம்மா கருப்புசாமி தங்கிருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தபோது புடவையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.மேலும் இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.




Suicidal Trigger Warning.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)