சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் வரலாறு துறை முதுகலை இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 



அதில் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் பிரேம் குமார் என்பவர் கடந்த ஓராண்டு காலமாக பாலியல் ரீதியாக தொட்டு பேசுவதும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், ஜாதி பெயரை சொல்லி திட்டுவது அதனை வெளியே சொன்னால் ஃபெயில் ஆகி விடுவதாக மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.



இதுதொடர்பாக விசாரணை நடத்திய சேலம் சூரமங்கலம் மகளிர் ஆய்வாளர் சுப்பு லட்சுமி உதவி பேராசிரியர் பிரேம் குமார் மீது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது கொலை மிரட்டல் விடுத்தது, ஜாதி பெயரை சொல்லி திட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார் மேலும் சூரமங்கலம் உதவி ஆணையாளர் சரவண குமரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக உள்ள உதவி பேராசிரியர் பிரேம் குமாரை தேடி வருகின்றனர். கல்வி நிலையங்களில் பாலியல் புகார்கள் அதிகம் நடந்து வருவதால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.