Suicide : பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.

தாய்- தந்தை ஞாபகத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என இறப்பிற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

சேலத்தில் நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவி ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை. சேலம் மாவட்டம் தாதம்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த செல்வம், சுவிதா தம்பதியர்களின் மகள் பிரகதி (17), சேலம் அரசு கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலவழி கல்வியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பிரகதியின் தாய், தந்தை நண்பருக்கு ஜாமீன் ஏற்று பணத்தை பெற்றுக் கொடுத்த நிலையில் நண்பர் பணம் கட்டாததால், அந்த பிரச்சினைக்கு பயந்து கணவன்- மனைவி இருவரும் 2019-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டனர். பின்னர் இறந்துபோன செல்வத்தின் சகோதரி பராமரிப்பில் பிரகதி மற்றும் அவரது தம்பி நவதீப் வசித்து வந்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து நாளை நடைபெறும் பொதுத் தேர்விற்காக பயின்று வந்துள்ளார். 

Continues below advertisement

இதனிடையில் இன்று வீட்டிலிருந்து அனைவரும் வெளியே சென்றிருந்த நிலையில் பிரகதி வீட்டிற்குள் சென்று சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்றுவிட்டு உறவினர்கள் வீடு திரும்பி பார்த்தபோது, சிறுமி பிரகதி தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார். இதுதொடர்பாக வீராணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்க உள்ள நிலையில் அதற்கு பயந்து இறந்து விட்டதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்- தந்தை ஞாபகத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என இறப்பிற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை காலை பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வு எழுதும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Continues below advertisement
Sponsored Links by Taboola