தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் மச்சக்கண்ணு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் ரவிக்குமார்.

Continues below advertisement

ஜோலார்பேட்டை அருகே  மது போதையில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மகன் கட்டையால் தாக்கியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் மச்சக்கண்ணு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் ரவிக்குமார். இவர் தினந்தோறும் குடித்துவிட்டு தனது மனைவியான மணிமேகலை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திரும்பவும் அதேபோல குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. 

இதனால் மணிமேகலை தனது மகனான சாரங்கபாணிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது சாரங்கபாணியும் குடித்திருந்த காரணத்தால் தந்தை மகன் இருவருக்கும் இடையே கைகலப்பு முற்றியதாக தெரிகிறது.

அப்போது சாரங்கபாணி தனது தந்தையை கட்டையால்  பலமாக தலையில் தாக்கியதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார் ரவிக்குமார்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விட்டதாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் பலத்த காயமடைந்துள்ளதால் தர்மபுரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் உயிரை காப்பாற்ற முடியாது என்று கூறியதன் காரணமாக நேற்று மாலை அங்கிருந்து தனியாருக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் ரவிக்குமாரை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது வரும் வழியிலேயே ரவிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் மத்தியில் பேசி புதைக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில்  ஜோலார்பேட்டை போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. ரகசியமாக வந்த தகவலையடுத்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

அதன் காரணமாக சாரங்கபாணியை ஜோலார்பேட்டை போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்று  விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கைது செய்து ஆம்பூர் மெஜிஸ்ட்ரேட்  முன்பு நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

மது போதையில் தந்தை மற்றும் மகன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் மகன் கட்டையால் தாக்கியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது மேலும் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விட்டதாக நாடகம் ஆடியது  இந்த சம்பவத்தில் நிகிழ்ந்தேறியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola