சூப்பர் சிங்கர் புகழ் - பிரபல பாடகி திவ்யாவிற்கு மர்ம நபர் ஒருவர் ஆபாச வீடியோவை அனுப்பிய நிலையில், அந்த வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் அவர். இது குறித்து விரைவில் புகாரளிக்க முடிவு செய்துள்ளதாக பாடகி திவ்யா தெரிவித்துள்ளார்.


விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் திவ்யா. சில திரைப்படங்களில் பின்னணி பாடலையும் பாடியுள்ளார். குறிப்பாக இவர் விஜயின் வில்லு, விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை உள்ளிட்ட சில திரைப்படங்களில் பாடி பிரபலமானவர்.



இந்த நிலையில் திவ்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மர்ம நபர் ஒருவர் ஆபாசமான அந்தரங்க வீடியோகளை அனுப்பியுள்ளார், அதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார்.


இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள செய்தியில் "எனக்கு Zoya Kait என்ற ஐடியில் இருந்து வந்த மெசேஜில், பிராண்ட் ஒன்றை புரோமோஷன் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த ஐடி மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது, அதனால் பிராண்டின் ஐடியில் இருந்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் அதற்கு அவன், ஆணின் அந்தரங்க உறுப்பு வீடியோ ஒன்றை அனுப்பி, இது உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? என தவறான பதிவுகளை அனுப்பினான். இதுபோன்ற நபர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். புகார் அளிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் நீங்கள் உதவ வேண்டும்” என்று கூறி ஆபாச வீடியோ அனுப்பிய நபரின் ஐடி மற்றும் ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார்


இந்நிலையில் பாடகி திவ்யாவிற்கு ஆதரவாக பலர் கருத்துகளை தெரிவித்து கண்டனத்தை பதிவுசெய்து வருகின்றனர்.