ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்வார் மாவட்டத்தில் உள்ள பிவாடி பகுதியில் உள்ள சுஹாத்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


நான்கு ஆண்கள் பசுவுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ளும் வீடியோ சமூக வைரலானதை தொடர்ந்து, ​​ராஜஸ்தான் போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ 


குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சாலையில் படுத்திருந்த கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்வதை வைரலான வீடியோ காட்டுகிறது. மற்றொருவர் கன்றுக்குட்டி சத்தம் போடாமல் தடுத்துள்ளார்.


சம்பவத்தின் போது மேலும் இருவர் உடனிருந்தனர். அவர்களில் ஒருவர் இந்த செயலை படம் பிடித்ததாக கூறப்படுகிறது.


அல்வார் மாவட்டத்தில் உள்ள சோபாங்கியில் மலைப்பாங்கான பகுதியில் இந்தச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஃபதே முகமது என்பவர் புகார் அளித்தார்.


இதனைத்தொடர்ந்து,  ஜுபைர், தலிம், வாரிஸ் மற்றும் சுனா ஆகிய நான்கு பேரை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்தனர்.


இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சாந்தனு குமார் சிங் கூறுகையில், “தகவல் கிடைத்ததும் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். புகாரை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினோம். தற்போது  குற்றம்சாட்டப்பட்டவர்களில் இருவரை நாங்கள் கைது செய்துள்ளோம்.  மற்ற இருவரையும் விரைவில் பிடிப்போம் என்று உறுதியாக நம்புகிறோம்” என்று கூறினார்.


 






மாடு கடத்தல் தலைவிரித்தாடுகிறது


கடந்த காலங்களில், பசு கடத்தல் சம்பவங்கள், போலீசார் மற்றும் கடத்தல்காரர்கள் இடையே என்கவுன்ட்டர் மற்றும் கும்பல் தாக்குதல் சம்பவங்கள் இப்பகுதியில் நடந்துள்ளன.


ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் கடந்த வாரம் பசு கடத்தல்காரர்கள் என்று கூறப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு பசு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண