பிரபல சின்னத்திரை தம்பதியான லதாராவ் - ராஜ்குமார் தம்பதியின் வீட்டில் திருட்டு நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 தொடங்கி, பல நாடகங்களில் நடித்து கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் பரிச்சயமான தம்பதியாக வலம் வருபவர்கள் ராஜ்கமல் - லதா ராவ் தம்பதி.


இவர்கள் வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த தொலைக்காட்சியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடியுள்ளனர். இந்நிலையில் ராஜ் கமல் - லதா ராவ் தம்பதி அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிந்து பைரவி தொடரின் தொடர்ச்சியாக வெளிவந்த சஹானா என்ற தொடரில் தன் தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கியவர் ராஜ்கமல்.  தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள ராஜ் கமல், சண்டிக்குதிரை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 


அதேபோல் இவரது மனைவி லதா ராவ் சின்னத்திரையில் அப்பா, திருமதி செல்வம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமானவர். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் இணைந்து ரியல் ஜோடியாக விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமாகினர். மேலும் தில்லாலங்கடி, நிமிர்ந்து  நில் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.


இந்நிலையில் இவர்களது வீட்டில் திருட்டு நடைபெற்ற சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை, மதுரவாயில் பகுதியில் வீடு ஒன்றை வாங்கி படப்பிடிப்புக்காக இவர்கள் உபயோகித்து வரும் நிலையில், நேற்று முன் தினம் இவர்களது வீட்டின் பின் பக்க பூட்டை உடைத்து 65 இன்ச் தொலைக்காட்சியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இதனையடுத்து ராஜ்கமல் - லதா ராவ் தம்பதி மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.