புதுச்சேரியில் நகை வியாபாரியை பீர் பாட்டிலால் தாக்கி வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


புதுச்சேரி முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் இனியன் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று கொம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு ஸ்கூட்டரில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். காவல் துறையினர் விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். உடனே காவலர்கள் அவர்கள் 2 பேரையும் முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர்.


விசாரணையில் சந்திக்குப்பம் பகுதியை சேர்ந்த ராகுல் (வயது 28), வில்லியனூர் ஒதியம்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்த ராம் விலாஸ் பஸ்வான் (31) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் தங்கள் கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து கடந்த 26-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் மருதூரை சேர்ந்த பழைய நகை வியாபாரி பிரகாஷ் (35) என்பவரை கொம்பாக்கத்தில் வைத்து பீர் பாட்டிலால் தாக்கி ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணம், ஒரு ஸ்கூட்டர், 3 செல் போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண