புதுவை காலாப்பட்டு சிறையில் 11 கைதிகள் தற்கொலை முயற்சி- ஆணிகளை விழுங்கியதால் பரபரப்பு...!

காலாப்பட்டு மத்திய சிறையில் தொடர்ந்து செல்போன்கள் சிக்கிய நிலையில் காவல்துறையினர் துன்புறுத்துவதாக கூறி கடந்த 2 நாட்களில் 11 கைதிகள் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Continues below advertisement

உணவு தட்டுகளால் உடலை கிழித்து புதுவை சிறையில் கைதிகள் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி அருகே காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 74 தண்டனை கைதிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

Continues below advertisement

இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிறிஷ்னியா உத்தரவின் பேரில் போலீசார் காலாப்பட்டு சிறையில் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி கடந்த 12ஆம் தேதி நடந்த சோதனையில் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் என்ற கைதியிடம் இருந்து ஒரு செல்போனை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு


இந்த நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் தங்களை கொடுமைப்படுத்துவதாகவும், குடும்பத்தினரை சந்திக்க விடுவதில்லை என கூறியும் 50க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் நேற்று திடீரென உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

அப்போது சிறை கைதிகள் 7 பேர் திடீரென தங்களின் உணவு சாப்பிடும் தட்டுகளால் தங்கள் கைகளில் கிழித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. உடனே அவர்களை சிகிச்சைக்காக காலாப்பட்டு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் விசாரணை கைதிகள் ஏழுமலை, ஸ்டீபன் ஆகிய 2 பேரும் சோப்பு மற்றும் ஷாம்பு போன்ற ரசாயன கரைசலை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் மயங்கி விழுந்த அவர்களை சிறைத்துறை அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு கைதிகள் சுகன் (28), பிரதீப் (26)   ஆகியோர் திடீரென இரும்பு ஆணிகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து 2 பேரையும் அங்கிருந்த சிறைத்துறை அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 
இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கைதிகள் 2 பேரும், அவரது குடும்பத்துடன் தொலைபேசி வழியாக பேச அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கைதி சுகன், பிரதீப் நேற்று மாலை அவர்களது குடும்பத்தினருக்கு போன் செய்து அதிக நிமிடங்கள் பேசியதாக தெரிகிறது. மற்ற கைதிகளும் பேச வேண்டும் என்பதால் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுகன், பிரதீப் ஆகியோர் இரும்பு ஆணியை விழுங்கி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

 

Afganistan : தலிபான்களிடம் சிக்கிய ராணுவ Machine.. கலக்கத்தில் ஆப்கான்வாசிகள்

Continues below advertisement
Sponsored Links by Taboola