கோவையில் தங்க நகைப் பட்டறையில் 50 இலட்ச ரூபாய் மதிப்பிள்ள ஒரு கிலோ தங்கம் திருடப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை இராஜ வீதி அடுத்த சண்முகா நகர் பகுதியில் மோகன் டை என்ற பெயரில் மோகன் குமார் (45) என்பவர் தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக தங்க நகை கடைகள் மற்றும் மொத்த வியாபாரமாக தங்க நகைகள் செய்து கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரமோத் வித்தால் போச்லே (20 ) என்பவர் பணியில் சேர்ந்துள்ளார். தங்க பட்டறையில் போச்லே பணி புரிந்து வந்துள்ளார். 


மோகன்குமார் தங்க நகை பட்டறையின் சாவியை, அக்கடையில் பணியாற்றும் நோவா என்ற தொழிலாளியிடம் கொடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மோகன்குமார் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு, நோவாவிடம் சாவியை கொடுத்துச் சென்றுள்ளார். பின்னர் நேற்று காலையில் கடையை திறக்க நோவா வந்த போது, கடை திறக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடைக்குள் சென்று பார்த்த போது போச்லே அங்கு இல்லை என்பதும், கடைக்குள் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.




இதையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, போச்லே திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
நேற்றைய தினம் காலை 8.30 மணியளவில் தங்கப் பட்டறை திறக்கும் முன்பும், மற்ற ஊழியர்களும் உரிமையாளரும் பணிக்கு வராத நிலையில் கடையின் சாவியை எடுத்து கடையில் இருந்த 1067.850 கிராம் அளவிளான தங்க நகை மற்றும் கட்டிகளை திருடுவிட்டு தப்பியோடியுள்ளனர். கடையின் சாவியை வைக்கும் இடத்தையும், கடை திறக்கும் நேரத்தை நன்று தெரிந்துக் கொண்டு திருடிச் சென்றுள்ளார். கடையை திறந்து ஒரு கவரில் தங்க நகைகளை எடுத்து போட்டுக் கொண்டு வெளியே தப்பிச் செல்லும் காட்சிகள் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளது. இதனையடுத்து வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் மோகன் குமார் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர்.


திருடப்பட்ட 1067.850 கிராம் தங்க நகைகளின் மதிப்பு 50 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. மேலும் நகையை திருடியவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நகை திருடிக் கொண்டு சொந்த ஊர் சென்றுயிருப்பாரா? நகையை வேறு யாரிடமாவது விற்பனை செய்ய முயல்கிறாரா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண