கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் நாகேஷ். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலம் பிடதி பகுதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்து பல்வேறு சேவைகள் செய்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு நாகேஷ் அவரது மனைவி ஜெயஹீ மற்றும் மூத்த மகளுடன் ஆசிரமத்தில் இருந்து சில காரணங்களால் வெளியேறினார். இவரது இரண்டாவது மகள் வருதினி மட்டும் ஆசிரமத்திலியே தங்கி தொடர்ந்து சேவை செய்து வந்துள்ளார். பின்னர் அவ்வப்போது ஆசிரமத்திற்கு நேரில் சென்று நாகேஷ் அவரது மகள் வருதினியை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக நாகேஷ்க்கு வேலைகள் இருந்ததால் மகள் வருதினியை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் நித்தியானந்தா பிடதி ஆசிரமத்தை தொடர்பு கொண்டு தனது மகளை காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.


 




 


அந்த சமயத்தில் பிடதி ஆசிரமத்தில் உள்ளவர்கள் நீங்கள் நேரில் சென்று பார்க்கமுடியாது, வேண்டும் என்றால் தொலைபேயின் மூலம் வீடியோ காலில் பேச அனுமதிக்கிறோம் என்று கூறியுள்ளனர் ஆசிரமத்தில் உள்ள நபர்கள், அதன் பிறகு தொலைபேசி மூலம் வீடியோ காலில் பேசிய நாகேஷின் இரண்டாவது மகள் தனக்கு ஆசிரமத்தில் இருந்து வெளியேற விருப்பம் இல்லை, அங்கேயே தான் இருக்க போகிறேன் என்று நாகேஷிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகேஷ் ஆசிரமத்தில் உள்ள தனது மகளை மீட்டு தருமாறு கர்நாடகா காவல்துறையினரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகேஷ் புகார் செய்துள்ளார்.


நாகேஷ் புகார் செய்த தகவல் பிடதி ஆசிரமத்தில் உள்ள நபர்களுக்கு தெரியவந்ததுள்ளது. இதனை அறிந்த பிடதி ஆசிரமத்தில் இருந்து நாகேஷின் மகள் வேறு ஒரு இடத்திற்கு இடமாற்றம் செய்து உள்ளனர். இந்த தகவல் நாகேசுக்கு கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகேஷ் தனது மகளை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் பல இடத்தில் தேடி உள்ளார்.



 


இந்த நிலையில் தான் திருவண்ணாமலை கிரிவலப் பாதை அடி அண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் நாகேஷின் மகள் இருப்பதாக நாகேஷ்க்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நாகேஷ் பெங்களூரில் இருந்து தனது மனைவி மற்றும் மூத்தமகளுடன் புறப்பட்டு வந்து திருவண்ணாமலை கிராமிய காவல்நிலையத்தில் தனது மகளை மீட்டுத்தருமாறு புகார் அளித்துள்ளார்.


இந்த புகாரின் அடிப்படையில் கிராமிய காவல்துறையினர் நேற்று இரவு கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் ஹேமமாலினி தலைமையிலான காவல்துறையினர் நித்யானந்தா ஆசிரமத்திற்கு நாகேஷ் மற்றும் அவரது மனைவி, மூத்த மகளுடன் நேரில் சென்று திடீர் சோதனை நடத்தினர். ஆனால் நாகேஷின் இரண்டாவது மகள் வருதினி இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அங்கிருந்து சென்றனர். இதனால் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.