புதுச்சேரியில் 28 இருசக்கர வாகனககளை திருடிய கடலூர் பகுதியை சேர்ந்த  வாலிபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் சமீப காலமாக தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டு போகும் சம்பவங்கள் நடந்து வருகிறது. ஒரு நாளைக்கு 2-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் திருடு போகின்றன. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டாலும் இதனை முற்றிலும் தடுக்க முடியாமல் போலீசார் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் நேற்று புதுவை முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Continues below advertisement


அதுபோல் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் புதுவை காந்தி வீதி- சின்னவாய்க்கால் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தினர். அந்த மோட்டார் சைக்கிளில் முன்பக்கத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் சி.என்.பாளையத்தை அடுத்த கிடையார்குப்பத்தை சேர்ந்த சவுந்திரராஜன் (வயது 25) என்பது தெரியவந்தது. பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை பின் பக்கத்தில் இருந்த நம்பர் பிளேட்டை வைத்து விசாரணை நடத்தியபோது அந்த வாகனம் புதுவை பதிவு எண் கொண்டதாக இருந்தது.


இதனை தொடர்ந்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரிடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அந்த வாகனத்தை புதுவை அண்ணா சாலையில் மதுக்கடை எதிரே திருடி வந்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் இதுபோல் புதுவையில் 27 ஸ்ப்லெண்டர் ப்ளஸ் வாகனங்களை திருடியதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதையடுத்து சவுந்தரராஜனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து திருடிய 28 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.


11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண