பெங்களூரைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர், ஓலா கேப் டிரைவர் தன் முன் சுயஇன்பத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது மிகவும் பாதுகாப்பற்றதாக உணர்ந்ததாகவும் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பெண் பத்திரிகையாளர் சமூக ஊடகங்களில் இந்தப் பிரச்னையை குறித்து எழுப்பியதை அடுத்து, பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல் பந்த் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார். மேலும் குற்றவாளியை கைது செய்ய உத்தரவிட்டார்.


புகழ்பெற்ற ஆங்கில நாளிதழில் பணிபுரியும் இளம் பத்திரிக்கையாளர், பணி முடிந்து ஓலா வண்டியில் தனது வீட்டிற்கு செல்ல முன்பதிவு செய்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.


இதுகுறித்து பெண் பத்திரிகையாளர், "என் வீடு மாதிரி நினைக்கும் நகரத்தில், இன்று எனக்கு மிகவும் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியது. வேலைக்குப் பிறகு, வழக்கமான நேரத்தில் ஓலாவை புக் செய்தேன். என் முன்னால் சுயஇன்பம் செய்யலாம் என்று நினைக்கும் ஒரு டிரைவருடன் மட்டுமே இருந்தேன். நான் கவனிக்கவில்லை என்று நினைத்து அவர் சுயஇன்பம் செய்து கொண்டிருந்தார். 




நான் கவனித்தவுடன், அவர் அணிந்திருந்த வேட்டியை மூடிவிட்டு, தவறு எதுவும் இல்லை என்று பாசாங்கு செய்தார். எனக்கு இருந்த சிறிய தைரியத்துடன், நான் கத்தினேன், கத்தினேன், அவரை வண்டியை நிறுத்தச் செய்தேன். துரதிருஷ்டவசமாக, நான் ஒரு இருண்ட தெருவின் நடுவில் ஒரு ஒளிஇல்லாத தெரு விளக்குடன் இருந்தேன். அவர் நின்று விட்டு வெளியேறினார்,"


அவசரகால தொடர்பு எண்ணை தன்னால் பயன்படுத்த முடியவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.  "அவசர தொடர்பு எண் உள்ளது. ஆனால் நீங்கள் அப்படி ஒரு சூழ்நிலையில் இருக்கும்போது, அதில் இருந்து  விலகிச் செல்ல வேண்டும் என்றே விரும்புவீர்கள். கற்பனை செய்ய முடியாத ஒன்று என்னால் நிறுத்த முடியாது. கடைசியாக நான் மற்றொரு கேப்பை புக் செய்தேன். அந்த கேப் டிரைவர் என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்” என்று கூறினார்.


டிரைவர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டு புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக ஓலா உறுதியளித்துள்ளது. ஆனால்,  “ஒரு நாள் வேலைக்குப் பிறகு, வீடு திரும்பும்போது யாராவது எப்படி பாதுகாப்பாக உணர வேண்டும்? நாம் செயல்படுவதை நிறுத்தப் போகிறோமா, ஏனென்றால் இந்த ஆண்கள், அதை தங்கள் பேண்ட்டில் எப்படி வைத்திருப்பது என்று தெரியவில்லை?. அதனால்தான் பெண்கள் தனியாக பயணம் செய்யும்போது செல்போனில் பேசுகின்றனர்.  அவர்கள், கண்காணிக்க மற்றவர்களுடன் இருப்பிடங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இவை அனைத்தும், பெண்களின் தவறு இல்லை. பெண்கள் பாதுகாப்பாக உணர விரும்ப இவ்வாறு செய்கின்றனர். இன்றிரவு என் நகரம் என்னிடம் தோல்வியுற்றது. பாலியல் துன்புறுத்தல் மூலம் என்னை மீண்டும் காயப்படுத்தியது. நாம் வாழும் இந்த உலகத்தில் மேலும் ஒரு பயம் சேர்ந்துள்ளது. என்று அவர் கூறினார்.


அவரது பதிவுகளுக்கு பதிலளித்த காவல்துறை ஆணையர் கமல் பந்த், "இதைக் கேட்டு நாங்கள் வருந்துகிறோம். உங்கள் புகார் உரிய முறையில் கவனிக்கப்பட்டு, குற்றவாளியை பிடிக்க ஒரு குழு ஏற்கெனவே பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பு கொள்வார்கள்.  ஓலா மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் " என்று அவர் உறுதியளித்தார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண