6 கோடி செலவு செய்து திருமணம் நடத்தியும், வரதட்சணை கேட்டு குடித்து விட்டு மனைவி மீது சிறுநீர் கழித்து கணவன் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


6 கோடி செலவு செய்து திருமணம்


பெங்களூரு, பசவனகுடி மகளிர் காவல் நிலையத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவர் மீது அளித்துள்ள புகாரில் ”நான் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண். என் தந்தை ஹைதராபாத்தில் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். பெங்களூரு பசவனகுடியைச் சேர்ந்த சந்தீப் என்பவருடன் எனக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.


ஆடம்பரமாக நடந்த எங்கள் திருமணத்துக்கு எனது தந்தை 6 கோடி ரூபாய் செலவு செய்தார். மேலும் எனது கணவர் சந்தீப்புக்கு திருமணத்தின்போது 200 கிலோ வெள்ளி, 4 கிலோ தங்கம், 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் ஒன்றையும் வரதட்சணையாகக் கொடுத்தனர்.


தலையில் சிறுநீர் கழித்து கொடுமை


இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக என்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சந்தீப்பும், அவரது பெற்றோரும் கொடுமைப்படுத்தி வருகின்றனர். வரதட்சணை கொடுக்க மறுப்பதால் குடித்துவிட்டு எனது தலையில் சந்தீப் சிறுநீர் கழித்து வருகிறார்.


என்னை இப்படி கொடுமைப்படுத்தி வருவதுடன் கொலை மிரட்டல் விடுத்தும் வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.


இந்தப் புகாரின்பேரில் சந்தீப் மற்றும் அவரது பெற்றோர் மீது பசவனகுடி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஆண் குழந்தை வேண்டி கொடுமை


இதேபோல் முன்னதாக ஆண் குழந்தை வேண்டி கணவன் மனைவியை கொடுமைப்படுத்திய நிலையில், மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் அமெரிக்காவில் வசித்து வந்த  நிலையில், முன்னதாக வீடியோ பதிவு செய்துவைத்துவிட்டு மந்தீப் கவுர் எனும் இப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.  


இந்நிலையில்,  சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது,பெண்ணின் கணவர் ரஞ்சோத்பீர் சிங், மந்தீப் கவுரை அடிப்பதும், அப்போது அவர்கள் குழந்தைகள் அழுதுகொண்டே தந்தையிடம் கெஞ்சுவதும், அப்போது அவர் குழந்தைகளில் கழுத்தை நெரித்து தனக்கு 'ஆண் பிள்ளை தான் வேண்டும்' என்று கூறுவதும் இடம்பெற்றிருந்தது.


இந்நிலையில், ரஞ்சோத்பீர் சிங்கை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண