நெல்லை மாவட்டம் பணகுடி அருகே அழகிய நம்பிபுரத்தை சேர்ந்தவர் மைக்கேல் மதன் சிங் (27). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணகுடி அருகே உள்ள முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஸ்நேகா என்பவரை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி  ஒன்றை வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக  கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஸ்நேகா செல்போனில் பேசிக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அப்போது ஆத்திரத்தில் அதனை பிடிங்கி வீசிய கணவர் கண்டித்து உள்ளார்.  அடிக்கடி செல்போனில் ஸ்நேகா பேசிக்கொண்டு இருப்பதாகவும், இதனால் இவர்களுக்குள் பலநாட்கள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.




இந்தநிலையில் நேற்று நடைபெற்ற தகராறில் செல்போனை பிடிங்கி வீசியதில் செல்போன் உடைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்நேகா தனது வீட்டினுள் உள்ள அறைக்கு சென்று அங்கு அறையை பூட்டிக்கொண்டு மின் விசிறியில் சேலையை கட்டி தூக்கில் தொங்கியுள்ளார். அவரது அலறும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஸ்நேகாவை தூக்கில் இருந்து இறக்கி பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மைக்கில் மதன் சிங்கை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது சபீர் ஆலம் நேரடியாக வந்து ஸ்நேகாவின் உறவினர்களிடமும், தாய் தந்தையரிடமும் விசாரணை நடத்தினார். இறந்த ஸ்னேகாவின் உடலில் வேறு எங்கும் காயம் இல்லை. தூக்கிட்டு கொண்ட கழுத்தில் மட்டுமே காயம் இருந்தது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்காக ஸ்நேகாவின் உடலை காவல்துறையினர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.





மாநில உதவிமையம் : 104




சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண