செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள பொன்மார் பகுதியில்,  கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.  நேற்று கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம்


பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  தாழம்பூர் காவல் நிலைய போலீசார்  உடலை கைப்பற்றி முதற்கட்ட விசாரணையை துவங்கி உள்ளனர்.   போலீசார் உடலை பற்றிய பொழுது  அதிர்ச்சி  காத்திருந்தது.  உயிரிழந்த இளம் பெண்ணின்  உடல்  இரும்பு கம்பிகளால் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் கிடந்துள்ளது.  இதனை அடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அடுத்துள்ள குரோம்பேட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மொபைல்ஃபோன்


உடல் கைப்பற்றப்பட்ட இடத்தில் இருந்த தடயங்களை போலீசார் ஆய்வு மேற்கொண்டது சடலம் அருகே, ஒரு மொபைல்ஃபோன் இருப்பது தெரிய வந்தது. மொபைல்ஃபோனை கைப்பற்றிய போலீசார் அதிலிருந்த   தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உயிரிழந்த பெண் குறித்து தகவலை கேட்டு அறிந்துள்ளனர்.  அதில் உயிரிழந்த பெண் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும்.  பெண்ணின் பெயர் நந்தினி (25)  மதுரை சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  பெண்ணை யார் கொலை செய்தது என்ன காரணத்திற்காக கொலை செய்தார்கள் என்ற   கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


காதல் விவகாரமா?


பெண்ணின்  தொலைபேசி மூலமாக யார் யாரிடம்,  நந்தினி கடைசியாக பேசினார்.  என்பது குறித்தும் போலீஸ் விசாரணை மேற்கொண்டதில்,  இந்த கொலை காதல் விவகாரத்தில் நடைபெற்று இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.  இது தொடர்பாக இளைஞர் ஒருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.  மென்பொருள் நிறுவன பெண் ஒருவர் கொடூர முறையில் கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது