நாகப்பட்டினம் அருகே முதலிரவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மணப்பெண், மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தலைமறைவான மணமகனை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.


திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுாரைச் சேர்ந்த நாகராஜனின் மனைவி பரமேஸ்வரிக்கு 26 வயதான நளினி என்ர மகள் இருந்துள்ளார். இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த தொழுதூரை சேர்ந்த 37 வயதான  ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க :  ஊழியர்கள் அதிர்ச்சி.. 2500 பேரை வேலையை விட்டு தூக்கிய பைஜூஸ் நிறுவனம்.. இதுதான் காரணமாம்..


இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் ஆலத்தம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து முறைப் படி கடந்த 27 ம் தேதி திருமணம் நடைப்பெற்றது. திருமணம் நடைப்பெற்ற கையோடு திருமணமான புது தம்பதியினருக்கு முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 


தொடர்ந்து, இருவரும் தனிமையில் இருந்தபோது மணமகன் ராஜ்குமார் நளினியை இயற்கைக்கு மாறான உறவு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண் மயக்கம் அடைந்துள்ளார். 




இந்தநிலையில், மணப்பெண்ணின் தாய் பரமேஸ்வரி, எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருந்ததாவது: திருமணத்திற்கு வரதட்சணையாக 12 சவரன் நகை, பைக் மற்றும் மூன்று லட்சம் ரூபாய்க்கு சீர் வரிசை பொருட்கள் வழங்கினோம். தொடர்ந்து எனது பெண்ணுக்கு அந்த நபருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 


மாப்பிள்ளை வீட்டில் நடந்த முதலிரவின்போது மாப்பிள்ளை, என் மகளை மணமகன் இயற்கைக்கு மாறாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் முதலிரவு அறைக்கு ஓடியுள்ளனர். 


மேலும் படிக்க : "என் சிங்கம் வந்துடுச்சு" வடிவேலுவோடு கலக்கிய வெங்கல் ராவ்.. பகிர்ந்த சுவாரஸ்யங்கள்..


இதனால் பயந்துபோன ராஜ்குமார் தப்பி விட்டார். உடல் முழுதும் காயங்களுடன் மயங்கி கிடந்த எங்கள் மகளுக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனநலம் பாதித்தவரை போல நடந்துக் கொண்ட ராஜ்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் தப்பி ஓடிய ராஜ்குமாரை தேடி வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண