மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து மணல்மேடு வழியாக கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்து இயங்கி வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த பேருந்தில் பயணம் செய்த சேத்துரைச் சேர்ந்த ராஜ் என்பவருக்கும் பேருந்து நடத்துனர் திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த மோகன் என்பவருக்கும் பயண சீட்டு வாங்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ராஜி தனது குடும்பத்தினருடன் சேத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி உள்ளார். அதன் தொடர்ச்சியாக பேருந்து கும்பகோணம் சென்று விட்டு மீண்டும் சிதம்பரம் நோக்கி வரும் பொழுது, ராஜ் அவரது ஆதரவாளர்களுடன் சேத்தூர் அருகே மண்ணிபள்ளம் என்ற இடத்தில் இருசக்கர வாகனங்களுடன் பேருந்து முன்புறம் நிறுத்தி பேருந்தை மறித்து உள்ளனர்.




பேருந்தின் உள்ளே ஏறி நடத்துனர் மோகனை பேருந்து உள்ளேயே கடுமையாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவரை கீழே இழுத்து வந்து சாலையில் வைத்து அடித்து உதைத்துள்ளனர். இதனை அடுத்து அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், தாக்குதலில் காயமடைந்த நடத்துனர் மோகனை ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக பேருந்து நிர்வாகம் சார்பில் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.




தற்போது நடத்துனரை பலர் சேர்ந்து தாக்கும் கொடூர தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய சிவசிதம்பரம், ராஜ், இயேசு பிரதாப், புருஷோத்தமன் உள்ளிட்டோர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண