மும்பையில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆசிரியர் ஒருவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


 


மும்பையில் உருது வகுப்புகளை நடத்தி வந்த மௌலவி என அழைக்கப்படும் ஆசிரியர் ஒருவர் தனது மாணவிகளுள் ஒருவரான 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சம்பவத்தன்று அந்த 8 வயது பெண் குழந்தையை , அவரது சித்தி ( மாற்றாந்தாய்) மதிய வகுப்பிற்கு தயாராகுமாறு கூறியிருக்கிறார். அந்த பெண் பயந்து அழுதுக்கொண்டே , நான் வகுப்பிற்கு செல்லமாட்டேன் என அடம்பிடித்திருக்கிறார். இது குறித்து அந்த குழந்தையின் சித்தி விசாரித்த பொழுதுதான் அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவத்தை அந்த குழந்தை தெரிவித்திருக்கிறார். உருது கற்றுக்கொடுக்கிறேன் என்ற பெயரில் மௌலவி  தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததையும் , அதனால் தனக்கு ஏற்பட்ட வலி இருப்பதையும் குழந்தை வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.அதிர்ந்து போன அப்பெண்ணின் சித்தி , காவல்துறையில் அந்த நபரின் மீது புகார் அளித்துள்ளார்.




வினோபா பாவே மார்க் காவல் நிலையத்தில் மௌலவிக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினமே மௌலவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை பல்வேறு கட்டங்களாக  நடைப்பெற்ற நிலையில் அரசு வழக்கறிஞர் வீணா ஷெலர் 10  சாட்சியங்களை விசாரித்தார். மேலும் சில சிசிடிவி காட்சிகளையும் நீதிமன்றத்தில் சமர்பித்தார். அதில் மௌலவி  பாதிக்கப்பட்ட பெண் குழந்தையையும் அவரது சகோதரியையும் பின் தொடர்ந்து செல்வதை காண முடிந்துள்ளது. இது குறித்து குற்றவாளி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , அவரை பொய்யாக இந்த வழக்கில் இணைத்துள்ளதாகவும் , அவர் ஒரு  மௌலவி  அல்ல , சாதாரண தையல்காரர் என கூறினர். இதற்கான சாட்சியங்களை முன் வைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் , அவர் மாணவர்களுக்கு உருது வகுப்புகள் எடுக்கும் சில சிசிடிவி காட்சிகளை எடுத்து வைத்தார்.



இந்த வழக்கு விசாரணையில் அந்த உருது ஆசிரியர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததது உறுதியான நிலையில் , 35 வயதான மௌலவிக்கு சிறப்பு POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012) பிரிவின் கீழ் , 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவன் சிறையில் அடைக்கப்பட்டார். ஆசிரியர் என்ற போர்வையில் குழந்தைகளிடம் அத்துமீறி நடந்துக்கொண்ட மௌலவியின் செயல் அப்பகுதி மக்களிடையே மிகுந்த கோபத்தையும் , ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் மீதான் பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , அவர்களின் அன்றாட செயல்பாடுகள் குறித்து பெற்றோர்கள் கேட்டறிவது அவசியம்.