சுத்தியால் அடித்துக்கொலை:


அண்மைக்காலமாக நடக்கும் கொலைகள் ஒவ்வொன்றும் நடுங்கவைக்கும் ரகமாகவே இருக்கின்றன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இளைஞர் ஒருவர் தனது அத்தையை சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை மார்பிள் கட்டர் கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டியுள்ளார்.


அதன் பின்னர் வெட்டப்பட்ட பாகங்களை பொட்டலங்களாகக் கட்டி டெல்லியில் ஒதுக்குப்புறமான பகுதிகளில் வீசி எறிந்துள்ளார். இத்தனையும் செய்துவிட்ட தன் அத்தையைக் காணோம் என்று அவர் காவல்துறையில் புகாரும் கொடுத்துள்ளார். ஆனால் போலீஸ் விசாரணையில் அவர்தான் கொலைகாரர் என்று கண்டுபிடித்துவிட்டனர்.


நடுங்க வைத்த ஷ்ரத்தா கொலை வழக்கு:


அப்தாப் அமீன் பூனவல்லா என்பவருக்கும் அவரது லிவ்-இன் காதலி ஷ்ரத்தாவுக்கும் கடந்த மே 18ஆம் தேதி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கி உள்ளார். 


வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நாள் இரவு எடுத்து சென்று காட்டில் எறிந்துள்ளார். இதற்காக, தினமும் அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி வெட்டப்பட்ட உடல் பாகங்களை அவர் அப்புறப்படுத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.


மாணவியை தூக்கி எறிந்த ஆசிரியை:


இது குறித்து காவல்துறை தரப்பில், நிகார் நிகாம் பாலிகா வித்யாலயா பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி வந்தனா. இவர் வழக்கம் போல் வகுப்பறையில் இருந்துள்ளார். அப்போது ஆசிரியர் கீதா தேஷ்வால் வந்தனாவை தாக்கியுள்ளார். கத்தரிக்கோலால் மாணவியை அவரை தாக்கியுள்ளார். பின்னர் அவர் வந்தனாவை வகுப்பறையில் இருந்த ஜன்னல் வழியாக கீழே வீசியுள்ளார். கீதாவை தடுக்க ரியா என்ற ஆசிரியர் எவ்வளவு முயன்றுள்ளார். ஆனால் கீதா அந்த குழந்தையை ஈவு இரக்கமின்றி ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார்.


இதனைப் பார்த்து சக குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பள்ளிக்கு வெளியே இருந்தவர்கள் குழந்தை கீழே விழுவதைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். பின்னர் சம்பவம் தொடர்பாக எங்களுக்கு புகார் வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நாங்கள் கீதாவை கைது செய்தோம். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. எந்தச் சூழலில் எதற்காக அவர் இந்த கொடூர செயலை செய்தார் என்று இன்னும் உறுதியாகவில்லை என்றார். சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளது. டெல்லி மத்திய பகுதி துணை ஆணையர் ஸ்வேதா சவுஹான் இந்த வழக்கை குழு அமைத்து விசாரித்து வருகிறார்.


தந்தையை கொலை செய்து உடலை ஃப்ரிட்ஜில் வைத்து இளைஞர்


ஷ்ரத்தா கொலை அதிர்ச்சி அகல்வதற்குள்ள் டெல்லியில் தனது தாயுடன் இணைந்து தந்தையை கொலை செய்து அந்த உடலை 10 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்திருந்து ஒவ்வொன்றாக டெல்லியின் பல்வேறு குப்பை தொட்டிகளிலும் வீசி எறிந்த நபர் கைது செய்யப்பட்டார். கூடவே அவருக்கு உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்டார்.


மாணவியை தூக்கி எறிந்த ஆசிரியை:


இது குறித்து காவல்துறை தரப்பில், நிகார் நிகாம் பாலிகா வித்யாலயா பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி வந்தனா. இவர் வழக்கம் போல் வகுப்பறையில் இருந்துள்ளார். அப்போது ஆசிரியர் கீதா தேஷ்வால் வந்தனாவை தாக்கியுள்ளார். கத்தரிக்கோலால் மாணவியை அவரை தாக்கியுள்ளார். பின்னர் அவர் வந்தனாவை வகுப்பறையில் இருந்த ஜன்னல் வழியாக கீழே வீசியுள்ளார். கீதாவை தடுக்க ரியா என்ற ஆசிரியர் எவ்வளவு முயன்றுள்ளார். ஆனால் கீதா அந்த குழந்தையை ஈவு இரக்கமின்றி ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார்.


இதனைப் பார்த்து சக குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பள்ளிக்கு வெளியே இருந்தவர்கள் குழந்தை கீழே விழுவதைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். பின்னர் சம்பவம் தொடர்பாக எங்களுக்கு புகார் வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நாங்கள் கீதாவை கைது செய்தோம். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. எந்தச் சூழலில் எதற்காக அவர் இந்த கொடூர செயலை செய்தார் என்று இன்னும் உறுதியாகவில்லை என்றார். சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளது. டெல்லி மத்திய பகுதி துணை ஆணையர் ஸ்வேதா சவுஹான் இந்த வழக்கை குழு அமைத்து விசாரித்து வருகிறார்.