திருவாரூர் மாவட்டம் மானந்தாங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் 36 வயதான சுதாகர் தனக்கு ஏற்பட்ட இருதய பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவதற்காக தனது மனைவி சுதாவின் அண்ணனான பிரசாந்த் என்பவரிடம் 1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அவருக்கு உடல்நிலை சரியான பிறகு இந்த பணத்தை திருப்பித் தரும்படி பிரசாந்த், சுதாகரிடம் அடிக்கடி கேட்ட நிலையில் வாங்கிய ஒரு லட்சத்தை தவனை முறையில் கொடுத்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் 90 ஆயிரம் பணத்தை சுதாகர் திருப்பிக் கொடுத்த நிலையில் மீதமுள்ள 10 ஆயிரம் பணத்தை கொடுக்க வேண்டும் என பிரசாந்த் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. சுதாகர் கொடுக்க வேண்டிய 10,000 ரூபாய் பணத்தில் பிரசாந்த் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது கணவரை பிரசாந்த் தாக்கி விட்டதாகவும் கூறி சுதாகரின் மனைவி சுதா பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருவாரூரில் காவல் நிலையம் முன் தீக்குளித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கு.ராஜசேகர் | 06 Apr 2022 12:20 PM (IST)
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த நான்கு நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சுதாகர்
Published at: 06 Apr 2022 03:55 PM (IST)