ஒரு நடுத்தர வயது பெண் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவனுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சாண்டா குரூஸ் நகரை சேர்ந்தவர் 29 வயதான கமல்நாத். ஜவுளி தொழிலதிபர். இவருக்கு 22 வயதான கஜோல் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. 


இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவர்களது குடும்ப பிரச்சனையில் உறவினர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் தீர்வு காண முடியவில்லை. இதையடுத்து கடந்த 2021 ம் ஆண்டு காஜல் தனது கணவரை விட்டுவிட்டு தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.


இந்த ஆண்டு திடீரென கஜோல் தனது கணவருடன் வாழ ஆசையாக இருப்பதாக தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் முதல் கணவர் வீட்டுக்கு சென்று ஒன்றாக வாழ ஆரம்பித்துள்ளார். மேலும், காஜல் முன்பை விட அதிக நேரம் சமையலறையிலும், சமைப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். 


இந்தநிலையில், கடந்த ஜூலை மாதம் கமல்நாத்தின் தாயார் சரளாதேவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது உடலின் பல உறுப்புகள் செயலிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறிது நாட்களில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரளாதேவியின் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை.


இதையடுத்து, ஆகஸ்ட் 24ம் தேதி கமல்நாத்து தனது தாயார் சரளாதேவி போன்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக தெற்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ரத்தத்தில் கனரக உலோகம் இருப்பது தெரியவந்தது. அவரது ரத்தத்தில் ஆர்சனிக் மற்றும் தாலியம் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது.


ஸ்லோ பாய்ஷன்:


17 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்நாத், உடல் உறுப்புகள் செயலிழந்ததால் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி உயிரிழந்தார். அடுத்தடுத்த மாதங்களில் தாய் மற்றும் மகன் ஒரே மாதிரி உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர். ஆனால் அவரது மனைவி கஜோலோ சிறிதும் கவலையின்றி, கணவர் இறந்த பிறகு, தனது ஜவுளி நிறுவனத்தில் இயந்திரங்களை விற்று செலவு செய்து வந்துள்ளார். 


இதனால் கமல்நாத்தின் சகோதரி காவல்நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்தபோது, ​​உணவில் கொஞ்சம் கொஞ்சமாக சயனைடு கலந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, கஜோல் தனது கணவர் மற்றும் மாமியாருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், இதற்கு முன்பு அந்த மருந்தை தனது மாமியாரிடம் கொடுத்து, அது செயல்படுகிறதா என்று பரிசோதித்ததாகவும், தினமும் தண்ணீர், இளநீர், ஜூஸ், பாலில் இந்த ஸ்லோ பாய்சனை கலந்து கொடுத்து வந்துள்ளார். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த ஆண் நண்பரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.