மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இளம் பெண்கள் இருவர் மீது குடும்ப உறுப்பினர்களே தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள பிபால்வா கிராமத்தில், ஆற்றங்கரையோரம் நின்று இரண்டு பழங்குடியின பெண்கள் தங்களது தாய்வழி உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். இதனை பிடிக்காத குடும்பத்தினர் இரு பெண்களையும் ஏன் அவர்களுடன் பேசினீர்கள் என்ற ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். பெண்களை அடித்து துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இருவரையும் எட்டி உதைத்து, தடிகளால் அடித்து, கன்னங்களில் அறைந்து சித்திரவதை செய்துள்ளனர். அதில் தப்பிக்க முயன்ற ஒரு பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்து சென்று அடிக்கிறார் ஒருவர். இந்த கொடூர காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இதில் இரு பெண்ணின் தாயும் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டிருப்பதுதான் அதிர்ச்சி . இதனை ஒருவர் படமெடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். சுற்றி நிற்கும் ஒருவர் கூட அவர்களை தடுக்க முன்வரவில்லை என்பதுதான் வேதனையின் உச்சம். கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி நடைப்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை அதிகாரிகள் , ஒரு பெண்ணின் தாய் உட்பட ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது.
இளம்பெண்ணை மரத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்த பெற்றோர் - பதறவைக்கும் சம்பவம்!