பைக் என்பது தற்போதைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக மாறிவிட்டது. பல்வேறு இடங்களில் பெற்றோர்களை தொந்தரவு செய்து பல்வேறு வகையான விலை உயர்ந்த பைக்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர் தற்போதைய இளைஞர்கள். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கரூர் அருகே பைக் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் அரிவாளால் ஒருவரை வெட்டி பழிதீர்த்து உள்ளனர்.




லாலாப்பேட்டை மேட்டுமகாதானபுரத்தை சேர்ந்தவர் அருகே கதிர்வேல் மகன் அருண்குமார் (23). இவர் நேற்று முன்தினம் தனது பைக்கை சாலையின் ஓரத்தில் நிறுத்தி உள்ளார். அப்போது நந்தன் கோட்டையை சேர்ந்த அண்ணாவி மகன்கள் பெரியசாமி (27), வினோத் (24), கீழசிந்தலவாடியை சேர்ந்த காத்தவராயன் மகன் ஆனந்தன் (23) ஆகிய 3 பேரும் பைக்கில் அந்த பகுதியின் வழியாக வந்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக் குறித்து தட்டி கேட்டதில் அருண்குமாருடன் தகராறு ஏற்பட்டது. 




அப்போது அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அருண்குமார் தனது நண்பர்களுடன் பைக்கில் நேற்று இரவு கீழ சிந்தலவாடிக்கு வந்துள்ளார். அப்போது அருண்குமாரை பெரியசாமி பார்த்துள்ளார். இதையடுத்து கோபமடைந்த அவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அருண் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார்.


சம்பவ இடத்திலேயே அருண்குமார் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த லாலாப் பேட்டை இன்ஸ் பெக்டர் சுகந்தி சம்பவ இடம் சென்று அருண்குமார் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தார். சம்பவம் அறிந்த உடன் அருண்குமார் உறவினருக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்து அருண்குமார் உடலை பார்த்து கதறி அழுதனர்.




இது குறித்து மேட்டு மகாதானபுரம் ஜோதிவேல் (33) கொடுத்த புகாரின் பேரில் லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமி, வினோத், ஆனந்தன் ஆகிய 3 பேரை செய்தனர். கைது பெரியசாமி, வினோத் ஆகிய இருவரும் அண்ணன், தம்பிகள் ஆவார்கள். இந்த கொலை சம்பவம் லாலாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X




பைக் நிறுத்தும் தகராறில் ஒருவர் வெட்டி கொலை செய்ததை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த எஸ்பி சுந்தரவடிவேல், டிஎஸ்பி சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.


இந்நிலையில் நாள்தோறும் கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் கொலை, குற்றம் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் அதை தடுக்க மாவட்ட காவல்துறை கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.