குளித்தலையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கில் தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 




கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையம் அருகே சண்முகா நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த 2021-ம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவரை அக்கல்லூரியின் முதல்வரும், அ.தி.மு.க பிரமுகருமான குளித்தலை காவிரி நகரை சேர்ந்த வக்கீல் செந்தில்குமார் பலமுறை பாலியல் தொந்தரவு செய்து, அந்த மாணவியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அக்கல்லூரியின் விடுதி காப்பாளராக பணிபுரியும் அமுதவள்ளி மற்றும் கல்லூரியில் படித்துக்கொண்டு சமையல் மற்றும் பராமரிப்புப் பணி செய்து வந்த மாணவியும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் செந்தில்குமார், அமுதவள்ளி உட்பட 3 பேர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த 3 பேரை தேடி வந்தனர்.





இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒருவரான அந்த தனியார் கல்லூரியில் படித்துக்கொண்டு சமையலராக இருந்த அக்கல்லூரி மாணவியை அவரது சொந்த ஊரிலேயே குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் கடந்த மே மாதம் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர் செந்தில்குமார் மற்றும் விடுதி காப்பாளர் அமுதவள்ளி ஆகிய 2 பேரையும் குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் செந்தில்குமார் மற்றும் அமுதவள்ளி ஆகிய 2 பேரும் சென்னை மேல்மருவத்தூர் பகுதியில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.




அதன் பேரில் தனிப்படை போலீசார் மேல்மருவத்தூர் சென்று செந்தில்குமார் அமுதவள்ளி ஆகியோரை குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் செந்தில்குமார் மற்றும் அமுதவள்ளி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண