கோடநாடு பங்களா கொலை வழக்கின் விசாரணை நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் தற்போது ஜாமீனில் உள்ள 8 நபர்களையும் மீண்டும் அழைத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தொலைபேசி மூலம் ஜாமீனில் உள்ள சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி ஆகியோரை தொலைபேசி மூலம் அழைக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது அவர்கள் 8 பேரும் கேரளாவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.