ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விச வாயு மூலம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரின் கொடுங்கல்லூரில் ஆஷிஃப்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்கு தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். 


இவருடை குடும்பம் மாடி வீட்டில் வசித்து வந்துள்ளது. கீழே வீட்டில் அவருடைய சகோதரி இருந்துள்ளார். நேற்று காலை 9 மணி வரை ஆஷிஃப் மற்றும் அவருடைய மனைவி ஆசிரா(34), குழந்தைகள் அசரா பாத்திமா(13) மற்றும் அனோநிஷா(8) ஆகிய யாரும் வெளியே வரவில்லை. இதைத் தொடர்ந்து ஆஷிஃபின் சகோதரி மேலே வந்து வீட்டை தட்டி பார்த்துள்ளார். அப்போது யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். 




இந்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வந்து கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது அந்த வீடு முழுவதும் இருந்து விச வாயு வெளியாகியுள்ளது. இது அங்கு சென்ற காவல்துறையினருக்கும் மூச்சு திணறலை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த வீட்டில் இருந்து புகையை வெளியேற்றியுள்ளனர். அங்கு ஆஷிஃப், அவது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்து அந்த அறைக்குள் இருந்துள்ளனர். 


இவர்களுடைய உடல்களை பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆஷிஃப் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு கடன் நெருக்கடி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விச வாயு பயன்படுத்தி தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: சிறுமி சடலத்துடன் உடலுறவு... காமக் கொடூரர்களுக்கு மரண தண்டனை அளித்த நீதிமன்றம்..!