கேரளாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த மாநில நிர்வாகி ஷான் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு பழிதீர்க்கும் விதமாக பா.ஜ.க.வைச் சேர்ந்த ரஞ்சித் சீனிவாசன் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அடுத்தடுத்து நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் காரணமாக கேரளாவில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Renjith Sreenivasan Murder: கேரளா பா.ஜ.க. நிர்வாகி கொலை : எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த 4 பேர் கைது!
சுகுமாறன் | 21 Dec 2021 09:25 AM (IST)
கேரளாவில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ரஞ்சித் கொலை விவகாரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட கே.எஸ்.ஷான் - ரஞ்சித் சீனிவாசன்