கரூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக கரூர் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சிலம்பரசனை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


 





கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 33). இவர் திமுக கரூர் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் அதே பகுதியைச் சார்ந்த 28 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏழு மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும் பின்னர் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்து  கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


 


 




இதுகுறித்து இளம் பெண் கொடுத்த புகாரின் பெயரில் சிலம்பரசனை கரூர் மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கரூர் கிளைச் சிறையில் நீதிமன்ற காவலில் 15 நாள் சிறையில் வைக்க உத்தரவிட்டார்.


 




மேலும் சிலம்பரசனுக்கு உதவியாக இருந்த பானுப்பிரியா (வயது 35) என்பவரை கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.