குடும்பத்தை சரிவர கவனிக்காமல் வேறு பெண்ணுடன் சென்ற கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு கைக்குழந்தையுடன் தரையில் அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுத பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 




திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டி, அருணாச்சல நகரை சேர்ந்தவர் நாகராணி (33). இவரது கணவர் மோகன்ராஜ். நாகராணிக்கு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 15 வயதில் இரட்டை சகோதரர்களான மகன்கள், 10 வயதில் ஒரு மகன், 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.


தாய், தந்தையை இழந்த நாகராணி பாட்டி வளர்ப்பில் வளர்ந்துள்ளார். திருமணத்தின் போது வரதட்சணையாக 16 பவுன் தங்க நகையும், ஒரு லட்சம் ரொக்கமும் சீர்வரிசையாக வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், குறுக்கு சாலையில் வசித்து வரும் மோகன்ராஜ் கரூர் மாவட்டம், வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணுடன் தகாத உறவு வைத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடமாக தகாத உறவு வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை சரி வர கவனிக்காமல் கைவிட்டதாக கூறப்படுகிறது .


 




தகாத உறவில் சென்ற கணவனை மீட்டுத் தரக் கோரி காவல் நிலையத்தில் தனது நான்கு மகனுடன் நாகராணி கண்ணீர் சிந்தினார். இது சம்பந்தமாக, இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நாகராணி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அங்கிருந்து நாகராணியை கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தை அணுகியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் போலீசார் தரப்பில் எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை என்று கூறி, மகளிர் காவல் நிலையம் முன்பு கைக்குழந்தையுடன் தரையில் அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதுள்ளார். இது தொடர்பான  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 


 




கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே போல் வரதட்சணைக் கொடுமையால் வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் அளிக்க வந்த நிலையில் புகாரை காலதாமதமாக பெற்றதாகக் கூறி குடும்பத்துடன் அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலில் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் தனது கணவரை மீட்டுத் தரக்கோரி அதே காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண