பள்ளப்பட்டி அருகே தனியார் பேருந்து மோதியதில் 12ஆம் வகுப்பு மாணவன் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா சேந்தமங்கலம் மேல்பாகம், எல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் மோகன்ராஜ் (வயது 17). இவர் அரவக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். 

 

மோகன்ராஜ் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தலையாரப்பட்டி பிரிவு அருகே செல்லும்போது தனக்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயற்சி செய்தார். அப்போது, எதிர் திசையில் பள்ளப்பட்டியில் இருந்து தாராபுரம் செல்லும் தனியார் பேருந்தில் நேருக்கு நேர் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

 

விபத்து குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளி மாணவன் மோகன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர