8-வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு.. சலவைத் தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை..
தற்போதுள்ள சூழ்நிலையில் 8 வயது சிறுவன் கூட தனது வீட்டில் வராண்டாவில் முன்பு விளையாட முடியாத சூழ்நிலைதான் உள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின் 14 நாட்களுக்குள் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கரூரில் கடந்த 19-09-2021-இல் 8 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்த சலவைத் தொழிலாளி சண்முகவேல் என்பவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதம் விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

Just In
கரூர் சின்ன ஆண்டான்கோவில் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் கார்த்திக்- நாகமணி, இவர்களது 8 வயது மகனை அருகில் வசித்து வரும் சலவைத் தொழிலாளி சண்முகவேல் என்பவர் கடந்த 19-09-2021 அன்று சாக்லேட் மற்றும் பிஸ்கட் தருவதாக அழைத்துச் சென்று சலவை செய்யும் அறைக்குள் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, 19-09-2021 அன்று கரூர் நகர காவல் நிலையத்தில் சலவை தொழிலாளி சண்முகவேல் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசீமாபானு இன்று தீர்ப்பு வழங்கினார்.
சிறுவனை ஏமாற்றி கடத்திச் சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம், கட்டத் தவறினால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கியும், போக்சோ சட்ட பிரிவின் படி 20 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் ஒரு ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி நசீமா பானு தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும், சிறுவனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டதற்கு தமிழக அரசு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்துள்ளார்.
மேலும், தற்போதுள்ள சூழ்நிலையில் 8 வயது சிறுவன் கூட தனது வீட்டில் வரண்டாவில் முன்பு விளையாட முடியாத சூழ்நிலைதான் உள்ளது. இந்த வழக்கை கடந்த 16.03.2022 இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட இந்த நீதிமன்றம் இவ்வழக்கை அரசு மற்றும் எதிர்தரப்பு அனைத்து விசாரணைகளையும் நிறைவு செய்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின் 14 நாட்களுக்குள் இன்று 29.03.2022 தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தனது தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.