கரூரில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மீது எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார். மாணவி உயிரிழந்தது தொடர்பாக புகார் அளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஆய்வாளர் கண்ணதாசனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி எஸ்.பி.சுந்தரவடிவேல் உத்தரவிட்டுள்ளார். 


 






நடந்தது என்ன?


கரூர் மாவட்டம், தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயது பள்ளி மாணவி நேற்று மாலை பள்ளி முடித்து வீடு திரும்பிய நிலையில், தனது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் தற்கொலை கொண்டுள்ளார்.


தகவலறிந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை என்னும் தகவல் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்மீது வெங்கமேடு காவல் நிலைய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை தொடர்ந்து கரூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடிதம் மற்றும் டைரி செல்போன் உள்ளிட்டவைகளை வெங்கமேடு போலீஸார் கைப்பற்றி  தகவலை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளியில் மாணவி பயின்று வருவதால் பள்ளி ஆசிரியர், மாணவர், தலைமையாசிரியர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவுசெய்துள்ளனர்.





 





 


I love you Amma


 


Chithappa, mani mama, ammu உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனா நான் உங்ககிட்ட சொல்லாமப் போறேன். இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது.


 


sorry.


 


மச்சான் Sorry." என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது


 


மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்
Helplines Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours) State suicide prevention helpline – 104 (24 hours),iCall Pychosocial helpline – 022-25521111