கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கல்லடையைச் சேர்ந்தவர் மருதை மகன் மோகன்ராஜ் என்கிற ஊமையன் வயது 33. இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டில் இருந்து உள்ளார். நள்ளிரவு இரண்டு மணி அளவில் இவருடைய நண்பர்கள் பைக்கில் பெட்ரோல் இல்லை என்று செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பெட்ரோல் வாங்கி வருமாறு கூறியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே செல்வதை கண்ட அவரது மனைவி எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். நண்பர்கள் பைக் பெட்ரோல் இல்லாமல் தான் பெட்ரோல் வாங்கி கொடுக்க சொல்வதாக சென்றுள்ளார்.




ஆனால் பொழுது விடிந்த பிறகும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் காலை கல்லடையில்  திருச்சி தோகைமலை சாலையோரமாக தலை மற்றும் உடம்பில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தோகைமலை காவல்துறையினர் அவர்கள் உடலை கைப்பற்றி வேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது. அந்த மர்ம நபர்கள் யார் என்றும் அல்லது அவரது நண்பர்களை ஏதேனும் முன் விரோதம் காரணமாக அவரை கொலை செய்துள்ளனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண