சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பியதாக கரூர் அதிமுக ஐ.டி.விங் மாவட்ட துணைத் தலைவர் கைது செய்யப்பட்டார்.


 




கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த பெரிய வடுகபட்டியை சேர்ந்தவர் நவலடி கார்த்திக் (37). இவர் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் துணைத் தலைவராக இருந்து வருகிறார். 


 




 


சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்துசாமி ஆற்று மணல் கொல்லைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்காக கிராம நிர்வாக அலுவலர் லூர்துசாமி அண்மையில் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது வெட்டி கொலை செய்யப்பட்டார்.


 




இந்த கொலை வழக்கு தொடர்பாக, அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கரூர் அதிமுக ஐடி விங் மாவட்ட துணைத் தலைவர் நவலடி கார்த்திக் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக  நவலடி கார்த்திக்கை கரூர் நகர காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கரூர் நகர காவல் நிலையம் முன்பு ஏராளமான அதிமுகவினர் குவிந்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண