காரைக்காலில் 14 வயது சிறுமி மீது உயிருள்ள நண்டை விட்டு பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த தமிழக பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் காரைக்கால் நகர பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டின் உள்ளே பேசி கொண்டிருந்தபோது, சிறுமி வீட்டின் எதிரே தனியாக அமர்ந்து செல்போனில் வீடியோகேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த அதே பகுதியை சேர்ந்த 23 வயதான மைக்கேல் என்பவர், ஆற்றில் தான் பிடித்து வந்த உயிருள்ள நண்டை தனியாக அமர்ந்திருந்த சிறுமியின் தொடையில் விட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அலறி துடித்துள்ளார். தொடர்ந்து மைக்கேல், சிறுமியின் கைகளை பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 


இதற்கிடையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மைக்கேலின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மைக்கேலை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர் காரைக்கால் நகர போலீசில் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


போக்சோ சட்டம் : 


கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். 18 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு : 



  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்

  • Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்

  • Sexual Assault - பாலியல் தொல்லை

  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை

  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு

  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்


இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.



  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை

  • இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை

  • 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)