திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவன் பாலமுருகனும், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த அனு என்ற இளம்பெண்ணும் காதலித்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு உள்ளனர். இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது  .




இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாலமுருகனுக்கு ஏற்கனவே, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது என்பது அனுவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அனு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் பாலமுருகன் சரிவர வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்து வந்துள்ளார்.




இதன் காரணமாக குடும்பம் நடத்த முடியாமல் அனுவுக்கும் பால முருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் பாலமுருகனை பிரிந்து அனு, தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.



இந்நிலையில் அனு, தனக்கும், தன் குழந்தைக்கும், பிழைக்க வருமானம் வேண்டி வேலை தேடிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை கிடைத்துள்ளது.தற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கைக்குழந்தையை தாயின் வீட்டில் விட்டுவிட்டு சொந்த ஊரிலிருந்து கிளம்பி வந்துள்ளார்.


தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் செயல்பட்டுவரும் தொழிற்சாலையின் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வாலாஜாபாத் அதிலிருந்து தினமும் ஒரகடத்தில் இயங்கிவரும் தொழிற்சாலைக்கு பேருந்து மூலம் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.


அனுவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று அனு எங்கிருக்கிறார் என்பதை இதை அறிந்து கொண்ட கணவன் பாலமுருகன் வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்து மனைவியை வெளியே அழைத்து வந்து சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.


 அப்போது கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென அனுவின் கழுத்தை சரமாரியாக குத்தி அறுத்து விட்டு தானும் மனைவியை அறுத்த கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அனு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அனுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளனர் அதற்குள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.


 இச்சம்பவம் குறித்து உடனடியாக தங்கும் விடுதி காப்பாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட அனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.


இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.