சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் வயது (38 ). இவரும் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சபரீஷ் ஆகிய இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் என்பவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

 



அப்போது செங்காடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டு வருவதாக உன் மீது தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்கள் வருவதாக தாமோதரன் சம்பத் இடம் தெரிவித்துள்ளார். உன் மீது வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் இருக்க வேண்டுமானால் எனக்கு பணம் அளிக்க வேண்டும் என இருவரும் சம்பத்தை மிரட்டி உள்ளார். இதையடுத்து சம்பத்தை தண்டலம் பகுதிக்கு வரவழைத்து பேரம் பேசி ரூ.7 லட்சம் பணத்தை அளிக்கும் போது தாமோதரன் ,சபரீஷ் ஆகிய இருவர் மீதும் சம்பத்துக்கு சந்தேகம் எழுந்தது. பணத்தை அளித்த பின்னர் இது குறித்து சம்பத் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



புகாரின்படி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தாமோதரனின் செல்போன் எண்னை ஆய்வு செய்து பூந்தமல்லி அருகே தலைமறைவாக இருந்து வந்த தாமோதரனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.பின்னர் தாமோதரனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் ரூபாய் 7 லட்சம் பணத்தில் ஆறு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை உல்லாசமாக செலவிட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்து மீதம் இருந்த பத்தாயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சபரீசன் என்பவரை இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.