சென்னை, தாம்பரம் அடுத்த பீர்கன்காரனை  அண்ணா தெருவை சேர்ந்தவர்  ஜெயராமன் (26). இவர் எம். காம் பட்டப் படிப்பை முடித்துள்ளார். தாம்பரம் சானிடோரியம் பகுதியில் அமைந்துள்ள  தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த யுவராணி (24) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார்.  பி.டெக் பட்டதாரியான, யுவராணி  சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.




இருவரும் காதலிப்பது குறித்து தங்களுடைய பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர். ஜெயராமனின் பெற்றோர் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். யுவராணி பெற்றோர் ஜெயராமனுக்கு வேலை கிடைத்த உடன் திருமணம் செய்து வைக்கலாம் எனக் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் வேலை கிடைத்த பிறகும் திருமணம் செய்து வைக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ஜெயராமனின் வீட்டிற்கு வந்த, யுவராணி ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டு உள்ளனர். அதன் பின் அவர்கள் இருவரும் செல்போனுக்கு வந்த அழைப்புகளை எடுக்காமல் இருந்துள்ளனர்.




இந்நிலையில் ஜெயராமனின்  தாய் மாலை வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு  வந்து பார்த்த போது ஒரே புடைவையில் ஜெயராமன் மற்றும் யுவராணி தூக்கில் தொங்கிய படி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் கதறி அழுதுள்ளார். இதனை கண்ட  அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.





அங்கு இருவரையும் பறிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த பீர்கன்காரனை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)


 




 


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண