விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வத்திராயிருப்பு. இந்த பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும் அத்திக்கோவில் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பைச் சேர்ந்தவர் வனம் என்ற வனராஜ். இவருக்கு வயது 50.


அதே பகுதியைச் சேர்ந்தவர் ஏசுராணி என்ற உமா. இவருக்கு வயது 28. இரண்டு குழந்தைகளுக்கு தாயான உமா கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், உமாவிற்கும், வனராஜிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வனராஜிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகியுள்ளது.


மனைவி உயிரிழப்பு:


வனராஜ் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 15-ந் தேதி இரவு உமாவின் குழந்தைகள் இருவரும் தூங்கிய பிறகு தோட்டத்தில் உள்ள மோட்டார் அறைக்கு உமாவும், வனராஜூம் சென்றுள்ளனர். அடுத்த நாள் காலையில் வனராஜ் அலறியடித்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது மனைவி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்தக்காயங்களுடன் இருந்த உமாராணியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். வனராஜிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் அளித்தார். இதனால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது.


பகீர் பின்னணி:


அதாவது, 15-ந் தேதி இரவு கணவன் மற்றும் மனைவியான வனராஜ் மற்றும் உமாராணி இருவரும் மோட்டார் அறைக்கு சென்று மது அருந்தியுள்ளனர். பின்னர், கணவன் மனைவி இருவரும் உறவு கொண்டுள்ளனர். அப்போது, மது போதையில் இருந்த வனராஜ் உமாராணியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளார். ஆனாலும், மதுபோதையில் வனராஜ் உமாராணியின் பிறப்பிறுப்பில் அங்கே இருந்த டார்ச்லைட்டை உள்ளே செலுத்தியுள்ளார். இதனால், வலியால் துடித்த உமாராணிக்கு அளவுக்கு அதிகமான ரத்தம் வெளியேறியுள்ளது.


மதுபோதையில் இருந்த வனராஜ் அப்படியே தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது உமாராணி ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். போலீசாரின் விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, வனராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.


மேலும் படிக்க: Crime: தாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு போலீசுக்கு போன் செய்த சிறுவன்! - காரணம் தெரியுமா?


மேலும் படிக்க: Chhattisgarh: போதை மருந்து கலந்த குளிர்பானம்; 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - சிறுவன் உட்பட 3 பேர் கைது..