நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற வழக்கில் பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ஹரிநாடாரை போலீசார் கைது செய்தனர். கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிநாடாரை சென்னை திருவான்மீயூர் போலீசார் கைது செய்தனர்.


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் குறித்து கடந்தாண்டு நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக ஹரி நாடார் விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக விஜயலட்சுமி புகார் கூறியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சீமான், ஹரிநாடார், சதா ஆகியோரின் மீதும் திருவான்மீயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 


 






இதனிடையே, மோசடி வழக்கில் பெங்களூரு போலீசாரால் ஹரி நாடார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை, திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர். 


கை மற்றும் கழுத்தில் எப்போதும் கிலோக்கணக்கில் தங்க நகைகள். நீண்ட முடி. ஆடி, பென்ஸ் மற்றும் ஜாக்குவார் கார்கள் என எப்போதும் ஆடம்பரமாக காட்சியளிப்பவர்தான் ஹரி நாடார்.


கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற நாங்குநேரி இடைத்தேர்தலில் பனங்காட்டு படை கட்சி சார்பில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 4 ஆயிரத்து 243 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளரை பின்னுக்கு தள்ளிய ஹரி நாடார் அப்போது பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டார்.


மேலும், இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது ரோல்ஸ்ராய்ஸ் கார், பென்ஸ், ஆடி மற்றும் ஜாக்குவார் கார்களில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதுமட்டுமின்றி, கடந்தாண்டு திரைத்துறையில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் 2கே அழகானது காதல் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். அந்த படத்தில் நடிகை வனிதா கதாநாயகியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண