பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் எச் ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளை அவதூறாகவும் அவர்களது குடும்பத்தினர் பற்றியும் பேசியுள்ளார். இது தொடர்பாக துணை ஆணையர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஸ்ரீரன்  சார்பில் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


இந்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் பஜார் போலீசார் 294 பி ,  353 மற்றும் 505/1பி ஆகிய பிரிவுகளின் கீழ் அதாவது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும்  பொய்யான தகவல்களை பரப்புவதாகவும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுதொடர்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.




இந்த வழக்கில் சம்மனை பெற்றுக்கொண்டு வழக்கு விசாரணையில் ஆஜராகாததால் நடுவர் எண் 2 அரசியல்வாதிகளுக்கான சிறப்பு நீதிமன்றநீதிபதி பரம்வீர், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜாவுக்கு அக்டோபர் 7ஆம் தேதி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். கடந்த 27ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு எதிராக ஆஜராகவில்லை. 


இந்நிலையில் நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது எச் ராஜா இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ராஜா, அதன் பின் கட்சியினருடன் நீதிமன்றம் வருகை தந்தார். அவர் கோர்ட் உள்ளே செல்லும் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. 


அதன் பின் நடந்த விசாரணையில் வரும் டிசம்பர் மாதம் 8.12.2021 அன்று மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு அன்று வழக்கின் மீதான கேள்விகள் கேட்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். 


 


இன்றைய முக்கியச் செய்திகள் சில...










 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண