சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் இந்தியாவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கருகலைப்பு மாத்திரை சாப்பிட வைத்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 


குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் ஹேமச்சந்திர தயாமா(29) என்ற நபர் வசித்து வந்துள்ளார். அவர் ஒரு வங்கியில் கிரடிட் கார்டு வழங்கும் பிரிவில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்துள்ளது. இந்தச் சூழலில் இவருக்கும் 26 வயது பெண் ஒருவருக்கும் கடந்த ஓராண்டிற்கு முன்பாக பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது அந்த இளம்பெண்ணிற்கு இவர் கிரேடிட் கார்டு வழங்குவது தொடர்பாக முதலில் பேசியுள்ளார். பின்னர் நாளடைவில் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு காதலாக மாறியுள்ளதாக தெரிகிறது. மேலும் படிக்க:நைட்டு, பகல் லேப்டாப் தான்.. புல்லி பாய் நீரஜ் வீட்டில் எப்படி? தந்தை சொன்ன பகீர் தகவல்கள்!


இதன்பின்னர் தனக்கு திருமணமாகவில்லை எனக்கூறியும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறியும் பல முறை அப்பெண்ணை வற்புறுத்தி உடலுறவு செய்துள்ளார். அந்தப் பெண்ணும் காதலுருடன் பல முறை உடலுறவு வைத்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்தப்பெண் கருவுற்றுள்ளார். இதை அறிந்த ஹேமச்சந்திரா அந்த பெண்ணை கருகலைப்பு மாத்திரை சாப்பிட வற்புறுத்தியுள்ளார். தற்போது தமக்கு குழந்தை வேண்டாம் என்று கூறி அந்தப் பெண்ணை கருகலைப்பு மாத்திரை சாப்பிட வைத்துள்ளார். 




இந்த சமயத்தில்தான் ஹேமச்சந்திரனுக்கு திருமணமாகி ஏற்கெனவே ஒரு குழந்தை இருப்பது அந்தப் பெண்ணிற்கு தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இதுதொடர்பாக அவர் ஹேமச்சந்திரனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பேசி சமாளித்துள்ளார். இதை ஏற்க மறுத்த அப்பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில் காவல்துறையினர் ஹேமச்சந்திரனை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். காவல்துறையினரின் விசாரணையில் அந்தப் பெண்ணை ஏமாற்றியதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். 


அவரின் வாக்குமூலத்தை ஏற்று காவல்துறையினர் அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்ணை ஏமாற்றியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: கஞ்சா போட்டி.. உளறிய இளம்பெண்.. சிக்கிய ரவுடிகள்.. செங்கல்பட்டு என்கவுண்ட்டர் பின்னணி!