சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்ற கொடூர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


 


 


சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அவ்வப்பொழுது சாலை விபத்துகள் ஏற்படுவது அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை, விபத்துக்கு ஏற்ப வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னைக்கு கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .


 


 


 


சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், கோவளம் அருகே நின்று கொண்டிருந்த சண்டைனர் வாகனம் மீது கார் அதி வேகமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியதால் , பயணித்த ஓட்டுனர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தனர்.    


 


 


கார் அப்பளம் போல் நொறுங்கியதால் , அருகில் இருந்தவர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உடல்கள் மீட்டப்பட்டு வருகின்றன . இது தொடர்பாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று , உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறேன். இந்த கொடூர விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.