புதுச்சேரியில் கிரிக்கெட் பயிற்சியின் போது மாணவிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர், இயக்குனர் சங்கரின் மருமகன் ரோஹிட்(Rohith Damodaran) உள்ளிட்ட 5 பேர் மீது போஸ்கோ சட்டதின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஐந்து பேரையும் தேடி வருகின்றனர். புதுச்சேரி முத்திரையர் பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி மையம் உள்ளது. இங்கு வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். சோரப்பட்டை சேர்ந்த தாமரைக்கண்ணன் பயிற்சியாளராக உள்ளார். இவர், கிரிக்கெட் பயிற்சிக்கு வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வரும் 5 பேரையும் கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கைதாகாமல் இருக்கும் வகையில் 5 பேரும் முன் ஜாமீன் பெற முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்